தமிழ் மாலை

வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 18 ஏப்ரல், 2026

மாலை (67) நான் நடந்து வந்த பாதை !

 

.........எனது பாதை !........

நண்பர்களே ! பிறப்பு, வாழ்வு, மறைவு என்னும் மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியது மனித வாழ்வு. இவற்றுள் ஒன்றும் மூன்றும் ஒரு நொடியில் நிகழ்ந்து மறைவன ! இரண்டாவது நிகழ்வு தான் நீண்டது; சில நேர்வுகளில் மிக நீண்டது; பிற நேர்வுகளில் மிக மிக மிக நீண்டது !

 

நீண்டு அமைகிற வாழ்க்கையின், ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக அமைத்துகொண்டால் அதன் பெயர், பொருள் நிறைந்த வாழ்க்கை; ஒவ்வொரு நொடியையும் வீணாக்கிக் கொண்டே வந்தால் அது பொருளற்ற வாழ்க்கை !

 

இந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் தான் என் வாழ்க்கையை நான் அமைத்துக்கொள்ள முயல்கிறேன். தனக்காக மட்டுமே வாழாமல் பிறருக்காகவும் வாழ்தல் பயனுள்ள வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக அமைகிறது!

 

நாம் பள்ளியில் கற்பது அறிவின் ஒரு துளி மட்டுமே. பள்ளிக்கு வெளியில் தான் நமக்கான அறிவுப் புதையல் குவிந்து கிடக்கிறது. நாம் பிற மனிதர்களின் வாழ்க்கை முறையை உற்றுப் பார்க்க வேண்டும். அதன் மூலம் நாம் அடையும் அறிவுத் துளிகளே ஏராளம் !

 

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் உற்றுப் பார்க்கத் தொடங்கினால், நான் துளித்துளியாக அறிவை ஈட்டத் தொடங்கிவிடுகிறேன். உங்களை மேம்போக்காக நோக்கினால், உங்கள் மூலம் கிடைக்கக் கூடிய அறிவை நான் இழந்துவிடுகிறேன் !

 

நான் பெற்றுள்ள பட்டறிவை (EXPERIENCE) ஈட்டியுள்ள உலகியல் அறிவை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் நோக்கிலேயே கீழ்க்காணும் வழிமுறைகளில் என் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறேன் !

 

(1) முகநூலில் விழிப்புணர்வுக் கட்டுரைகளை  2015 – முதல் எழுதி வருகிறேன்!


(2) இலக்கியம், இலக்கணம், பாடல், தமிழ் வளர்ச்சி, புதுச்சொல் புனைதல், தமிழறிஞர்கள் வரலாறு மற்றும் இன்னபிற துறை சார்ந்த ஆய்வுகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறேன்!


என் இலக்கினை எட்டுவதற்கு வாய்ப்பாக, கீழ்க்காணும் முகநூற் குழுமங்களையும் (GROUPS), தனிப் பக்கங்களையும் (PAGES), சொந்த முகநூல் கணக்கினையும் (PROFILES) ஆட்சியராகப் பொறுப்பேற்று இயக்கி வருகிறேன்!

முகநூல்கள்

(01) தமிழ்ப் பணி மன்றம் முகநூற்குழு (GROUP)

(02) வை.வேதரெத்தினம் (PROFILE) 

(02) தமிழ்நாடு புலவர் பேரவை  (GROUP)

(03) உயர்தனிச் செம்மொழி  (GROUP)

(04) பிறந்த நாள்  (GROUP)

(05) நகைச்சுவைத் துளிகள்  (GROUP)

(06) நல்வாழ்வு  (GROUP)

(07)  மணிமொழி  (GROUP)

(08) வேலை வாய்ப்புபயிற்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலர் இணையம். முகநூற்குழு (GROUP)

(09) மூலிகைத் தோட்டம்  (GROUP)

(10) அரசியல் மேடை (GROUP)

(11) பொது அறிவுப் பூங்கா (GROUP)

(12) சமையற்கலை (GROUP)

(13) கணிதக் களம் (GROUP)

(14) பயனுள்ள சிறு குறிப்புகள்  (TIPS) (GROUP)

(15) முடிச்சு வகைகள் (GROUP)

(16) காணொலிப் பூங்கா (GROUP)

(17) போன்மிப் பூங்கா (GROUP)

(18) மாயக் கலை (GROUP)

(19) ஆட்டம் ! பாட்டம் ! கொண்டாட்டம் ! (GROUP)

(20) வேலை வாய்ப்புச் செய்திகள் (GROUP)

(21) வியப்பூட்டும் வினைத் திறமை (GROUP)

(22) மோகனசுந்தரத்தின் நகைச்சுவைப் பேச்சு (GROUP)

(23) சித்த மருத்துவர் தரும் நலக் குறிப்புகள் (GROUP)

(24) தென்கச்சி சுவாமிநாதன் நகைச்சுவை உரை  (GROUP)

(26) அகரமுதலி  (ஆங்கிலம் –தூயதமிழ்) முகநூற்குழு (GROUP)

(27) அகரமுதலி (வடசொல் – தமிழ்) முகநூற்குழு (GROUP)

(28) அகரமுதலி  (வடமொழிப் பெயர்-தமிழ்ப் பெயர்)  (GROUP)

(29) அகரமுதலி  (அருளியின் அயற்சொல் அகரமுதலி) (GROUP)

(30) அகரமுதலி  (மழலையர் பெயர்கள்) முகநூற்குழு (GROUP)

(31) நன்னூல் விதிகள் (GROUP)

(32) ஒற்றுப் பிழை (GROUP)

(33) புணர்ச்சி இலக்கணம் (வல்லெழுத்து மிகும் நேர்வுகள்) (GROUP)

(34)  புணர்ச்சி இலக்கணம் (வல்லெழுத்து மிகா நேர்வுகள்) (GROUP)

(35) களஞ்சியம் முகநூற்குழு (GROUP)

(36) அறிமுகம் (GROUP)

(37) செம்மொழி முகநூற் பக்கம் (PAGE)

(38) கலைச்செல்வன் முகநூற் பக்கம் (PAGE)

(39) கடிகை  மணி  முகநூற் பக்கம் (PAGE)

(40) கடிநெல்வயல் முகநூற் பக்கம் (PAGE)

(41) பாட்டரங்கப் பாடல்கள் (GROUP)

(42) திருவள்ளுவர் குடிருப்போர் நலச் சங்கம் (GROUP)

(43) Azhagi - facebook.

 

முகநூலில் எழுதுபவை அன்றாட வாசிப்புக்கு மட்டுமே பயன்படும். மேலும் மேலும் புதிய பதிவுகளை நண்பர்கள் இடும்போது என் பதிவுகள் கீழ்வரிசைக்குச் சென்று சில நாள்களில் மறைந்துவிடும். கட்டுரையின் தலைப்புத் தெரிந்தால் தான் அதை மீளவும் வருவித்துப் பார்க்கமுடியும்!

 

இவ்வாறு தேடிப் பார்க்கும் போது கிடைக்காத தன்மை உடையவை முகநூல் கட்டுரைகள்; ஆனால் நாம் விரும்பும் போது ஒரு நொடியில் வருவித்துப் பார்க்கும் வசதியுள்ள இணையதளப் பதிவு தான் “வலைப்பூக்கள்(BLOGS)”.

 

நான் பதிவேற்றம் செய்த முகநூல் கட்டுரைகளில் / எழுத்துகளில் முகாமையானவற்றை ”வலைப்பூ” (BLOG) வடிவில் உருவாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறேன் !


இவ்வாறு நான் உருவாக்கியுள்ள 25 வலைப்பூக்களின் (BLOGS) பெயர் விவரம் வருமாறு:-

வலைப்பூக்கள்

(01) புதிய சொல்லாக்கம் (நான் புனைந்த 61 புதிய சொற்களும் அவற்றுக்கான விளக்கமும்)

(02) புறநானூறு (23 பாடல்கள் - மூலமும் என் உரையும்)

(03)  தமிழ்ப்பணி மன்றம் (650 பதிவுகள்)

(04) தமிழ் மூலிகை (180 மூலிகைகளின் பயன்கள் பற்றிய விளக்கப் பதிவுகள்)

(05)  நல்வழி (ஔவையாரின் 40 பாடல்கள் - மூலமும் என் உரையும்)

(06) நான்மணிக்கடிகை (விளம்பி நாகனாரின் 106 பாடல்கள் மூலமும் என் உரையும்)

(07) மூதுரை(ஔவையாரின் 30 பாடல்கள் - மூலமும் என் உரையும்)

(08) மூலிகைப்படங்கள் (399 மூலிககைகளின் படங்கள்)

(09) வை.வேதரெத்தினம் (அரசுப் பணியில் 35 ஆண்டுகள் - என் துய்ப்புகள் பற்றிய வரலாறு- 75 மடலம்)

(10) தமிழ் இலக்கியம் (50 இலக்கியங்கள் பற்றிய செய்திக் கட்டுரைகள்)

(11) தமிழ் அறிஞர்கள் (31 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு)

(12) தமிழ்ச் சிப்பி (நான் எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுதி)

(13) தமிழ்ச் சுரங்கம் (86 விழிப்புணர்வுக் கட்டுரைகள்)

(14)தமிழ்ப் பெயர் (பெயர் விளக்கமும் மழலையர் பெயர்களும் -101 பதிவுகள்)

(15) தமிழ் மாலை (42 பல்சுவைக் கட்டுரைகள் அடங்கிய தொகுதி)

(16) தமிழ்ப் பாவை (.திருப்பாவைப் பாடல்கள் 30, மூலமும் என் உரையும்)

(17) தமிழ்ப் பண்டுவம் (483 நோய்களுக்கான மூலிகைப் பண்டுவப் பதிவுகள்)

(18) தமிழ்! தமிழ் ! தமிழ் ! (தமிழ் வளர்ச்சிக் கட்டுரைகள்.31)

(19) தமிழ் நட்பு (உறவினர்கள், நண்பர்கள் 17 பேருடைய வாழ்க்கை வரலாறு)

(20) காலச்சுவடுகள் (1944 முதல் 2019 வரை - என் வாழ்க்கை வரலாறு – 62 மடலம்)

(21) கணியப் பாடல்கள் (சோதிடக் குறிப்புகள் அடங்கிய பாடல்கள்)

(22) பாவாணர் தமிழ் (பாவாணரின் சொற்கள் அடங்கிய பட்டியல்)

(23) தமிழ்ப் பொய்கை ((58 பல்சுவைப் பாடல்களின் மூலமும்என் உரையும்))

(24) தமிழ்த் தேன் (முதல் வரையான நுட்பச் சொல் அகரமுதலி)

(25) திசை மாறிய பறவைகள் (கண்ணீர்  துளிர்க்க வைக்கும் உண்மைக் கதைகள்)


வலைப்பூக்களில் பதிவு செய்து வைப்பவை என்றைக்கும் அழியா; மறைந்து போகா. இன்னும் 100 ஆண்டுகள் கழித்துக் கூட அவற்றை என்னுடைய கான்முளையினர் பார்க்கமுடியும்; படிக்க முடியும்; படித்துக் களிக்க முடியும்!

 

முகநூல்களையும், வலைப்பூக்களையும் என் எழுத்துகளைப் பதிவேற்றம் செய்து நண்பர்களின் பார்வைக்கு வைக்கப் பயன்படுத்துகிறேன். என் கட்டுரைகளும், பாடல்களும், ஆய்வுப் பதிவுகளும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்யவும், தமிழுணர்வை வளர்க்கவும் பயன்படுகின்றன !

 

என் எழுத்துக்களை என் குரலிலேயே நண்பர்களின் செவிகளுக்கு விருந்தாகப் படைக்கும் முயற்சியாக கீழ்க்காணும் வலையொளி ஓடைகளை (YOU TUBE CHANNELS) உருவாக்கியிருக்கிறேன்!


 வலையொளி ஓடைகள்

(01)தமிழ்ப் பணி மன்றம் (@vaive-manram) (105 videos)

(02) புதுச்சொல் புனைவோம் (@vaive-punaivom) (64 videos)

(03) மூலிகைக் காற்று (@vaive-katru) (99 videos)

(04) மூலிகைச் செல்வம் (@vaive-selvam) (26 videos)

(05) கவிதைக் கடல் (@vaive-kadal) (79 videos)

(06) தமிழ்ப் புதையல் (@vaive-puthaiyal) (63 videos)

(07) பொற்கிண்ணம் (@vaive-kinnam) (53 videos)

(08) இலக்கிய அறிமுகம் (@vaive-ilakkiyam2) (46 videos)

(09) இன்று ஒரு இனிய தமிழ்ச் சொல் (@viaive-sol) (17 videos) 


மேற்கண்ட ஒன்பதிலுமாகச் சேர்த்து இதுவரை 105 + 64 + 99 +  26 + 79 + 63 + 53 + 46 + 17 = 552  காணொலிகளை (VIDEOS) வெளியிட்டிருக்கிறேன்!

 

என் தமிழ்ப் பணியில் இன்னொரு கோணமாக கருவிகள், எந்திரங்கள், அறைகலன்கள் ஆகியவற்றின் ஆங்கிலப் பெயர்களுடன், அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும், ”விக்சனரி”யில் ஆதாரங்களுடன் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

 

எடுத்துக்காட்டாக, கூகுளில் சென்று “அரம்” என்று உள்ளீடு செய்து தேடிப்பாருங்கள். நான் பதிவு செய்துள்ள பக்கம் உங்கள் பார்வைக்குக் கிட்டும் !

 

என் நோக்கமும் பணியும் (01) ”தமிழ் வளர்ச்சி”க்கு உழைத்தல் (02) இயன்றவரை பிறருக்கு உதவுதல் !

 

உங்களுக்கென ஒரு வலைப்பூ தொடங்கி அதில் உங்கள் எழுத்துகளைச் சேமித்து வைக்க, தணியாத தாகம் கொண்டிருப்போருக்கு நான் உதவி செய்ய அணியமாக இருக்கிறேன் !


அதற்கு உங்களிடம் ஒரு மடிக்கணி இருக்க வேண்டும் !

 

மடிக்கணினியுடன் ஓசூருக்கு உங்களால் வர முடிந்தால், ஒரே நாளில் உங்களுக்கு வலைப்பூ தொடங்கித் தந்து, அதில் உங்களைக் கொண்டே ஓரிரு பதிவுகள் செய்யவும் உதவுகிறேன் !

 

நேர்முகமான செயல்விளக்கம் அல்லாமல் கருத்தியலாக வலைப்பூவை உருவாக்கவோ, அதில் பதிவுகள் செய்யவோ உங்களால் முடியாது. அதனால் தான் நேரில் வரச் சொல்கிறேன்– ஒரு மடிக்கணினியோடு !

 

என் தமிழ்ப் பணியில் இதையும் ஒரு கடமையாக அமைத்துக் கொள்ள எனக்கு நிரம்பவே விருப்பம் ! வாய்ப்பும் ஆர்வமும் உள்ளோர் தொடர்பு கொள்க! பயன் பெறுக !

 

===============================================

அன்புடன்,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"தமிழ்மாலை வலைப்பூ" 

[திருவள்ளுவராண்டு: 2053,மடங்கல் (ஆவணி) 26]

{11-09-2022}

===============================================